கீழக்கரையில் ஜியோ நிறுவனம் சார்பாக கண்ணாடி இழை வயர்கள் (Fibre Optic Cable) பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி சாலை தெரு 18 வாலிபர் தர்ஹா பகுதியில் தொடங்கி வள்ளல் சீதக்காதி வழியாக எர்வாடி செல்லும் முக்கு ரோடு வரை நடைபெற உள்ளது. இதில் புதிய பஸ் நிலையம் மற்றும் வடக்குத் தெரு பகுதியும் அடங்கும்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி அதிகாரி கூறுகையில், “இப்பணி நகராட்சியின் முன் அனுமதியுடன், சேதார மதிப்பு தொகையான ரூபாய்.10 லட்சம் நகராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தகவல்:- மக்கள் டீம்.
You must be logged in to post a comment.