கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி கடந்த 25 வருடங்களாக கல்வி பணியாற்றி வருகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல் வேறு நாடுகளில் உயர் பதிவி வகித்து வருகின்றனர். இப்பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு புத்தக கல்வியுடன் நிறுத்திவிடாமல், வாழ்க்கைக்கு அவசியமான நடைமுறை கல்வியறிவை வளர்ப்பதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக டாக்டர்.APJ Abdul Kalam Science Forum அமைப்புடன் இணைந்து வரும் அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் “BRAIN RAIN 2018” – The Journey to the Utopian World என்ற தலைப்புடன் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர்.அலாவுதீன் மற்றும் இராமநாதபுரம் தாசில்தார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்.
இக்ககண்காட்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு முகைதீனியா பள்ளி நிர்வாகிகள் அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்கள்.
You must be logged in to post a comment.