Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இரமநாதபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு நர்ஸ் பலி..

இரமநாதபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு நர்ஸ் பலி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரி ராமகிருஷ்ணன் இவரது மனைவி சுதா, 37. இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொற்றா நோய் சிகிச்சை பிரிவில் நர்சாக பணியாற்றினார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதித்த இவர் , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் காய்ச்சல் பாதித்த அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுதா நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவஹர்லாலிடம் கேட்டபோது, உடல் நலம் பாதித்து, மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சுதா இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. மஞ்சள் காமாலை நோய் தாக்கத்தால் அவரது உடல் உறுப்புகள் செயலிழப பால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பா என்பது குறித்து மதுரை தனியார் மருத்துவமனை அறிக்கை கிடைத்தால் கூறமுடியும் என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!