பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் டவுன் பழைபேருந்து நிலையம் காந்திசிலை அருகே பா.ம.க.சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் மருதவேல் மாநில துணை தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ். நகர செயலாளர் வெங்கடேஷ் மற்றும், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தங்கதுரை, மாவட்ட துணை செயலாளர்கள், தேவேந்திரன்’ சுப்பிரமணியன், சின்னதுரை, பாலு, ரெங்கராஜ், மாநில செயற் குழு உறுப்பினர் செல்வகடுகு, தலைமை நிலைய பேச்சாளர் தமிழ் இனியன், வன்னியர் சங்க மாவட்டதலைவர் தர்மராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்லம்ரவி,ஒன்றிய செயலாளர்கள், செல்வகுமார், ராஜ்குமார், ஞானஜோதி அருள் நேரு, செந்துறை ஒன்றி செயலாளர் ராஜதுரை, திருமுருகன், தங்கராசு மற்றும் பாமக செய்தி தொடர்பாளர் இரா.வடமலை, காருகுடி வீரமுத்து மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மோடி அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:- அபுபக்கர்சித்திக்
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )
You must be logged in to post a comment.