இராமநாதபுரத்தில் 29.9.2018ல் ‘தூய்மையே சேவை’யை வலியுறுத்தி மாரத்தான் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை என்பதை அடிப்படையாக கொண்டு 15.9.2018 முதல் 02.10.2018 வரை தூய்மை பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் நகரில் 29.9.218ல் தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தி திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியானது 35 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 29.9.18 காலை 7:30 மணிக்கு தொடங்கி பட்டணம்காத்தான் நான்கு வழிச்சாலை சந்திப்பில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், சுழல்கோப்பை, 2ம் பரிசு ரூ.3,500, சுழல்கோப்பை, 3ம் பரிசு 2 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, நயினார்கோவில், போகலூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் 80983 87791, 97865 08157, 97902 04497 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர் பதியலாம் என தெரிவித்துள்ளார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.