5
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் ,திருப்புல்லாணி ஒன்றியம், புல்லந்தை கிராமத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் மஞ்சள் நிலா விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 57 ஆம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 84 அணிகள் மோதின.
இதில் முதல் பரிசையும் கோப்பையையும் புல்லந்தை மஞ்சள் நிலா A அணியும் , இரண்டாம் பரிசை வீரவணூர் மருதம் 7ns அணியும், மூண்றாம் பரிசை புல்லந்தை மஞ்சள் நிலா B அணியும் , நான்காம் பரிசை தூத்துக்குடி VOC செவல் அணியும், ஐந்தாம் பரிசை ஆலங்குலம் வானம்பாடி அணியும், ஆறாம் பரிசை பாம்பூர் 7 Sneak அணியும் தட்டிச் சென்றார்கள்.
இந்த நிகழ்ச்சியை கிராம இளைஞர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
You must be logged in to post a comment.