அம்மாவை கொன்று விட்டு கட்சியை கைப்பற்ற திட்டமிட்டவர் டிடிவி..கடந்த காலத்தை மறந்து பேசிய அமைச்சர் சீனிவாசன் – வீடியோ செய்தி..

அம்மாவை கொன்று விட்டு கட்சியை கைப்பற்றி முதலமைச்சர் ஆக அமர வேண்டும் என்று திட்டம் தீட்டியவர் டிடிவி தினகரன் என்று திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து நடைபெற்ற  கண்டன பொதுக்கூட்டத்தில் கடந்த கால வரலாற்றை மறந்து பேசியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அம்மாவைக் கொன்றுவிட்டு கட்சியை கைப்பற்றி முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்று திட்டம் தீட்டியவர் என்று குற்றம் சாட்டினார். மேலும் கொள்ளையடித்த பணத்தை கட்சியில் செலவு செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூறினார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..