9
அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் நாம் இதை செய்யலாமே. உதாரணமாக ஆட்சியர், BDO போன்றவர்களுக்கு கிராம சபை முறையாக நடத்தும் பொருட்டு, உரிய உத்தரவுகளை இட கோரி மனு செய்யுங்கள்.
VAO, செவிலியர், அரசு மருத்துவர், பள்ளி தலைமை ஆசிரியர், ரேசன் கடை விற்பனையாளர், சத்துணவு அமைப்பாளர் மற்றுமுள்ள அனைத்து துறை இணைத்து அரசு அலுவலக பொறுப்பாளர்களை கிராம சபையில் கலந்து கொள்ள / பேச அழைப்பு விடுங்கள்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுவசதி திட்டங்கள், தனிநபர் கழிப்பிடம், என்பன போன்ற அனைத்து அரசு திட்டங்களில்ஈகிராம மக்கள் தங்களை பயனாளிகளாக இணைத்து கொள்ள கிராம சபை நல்வாய்ப்பு என்பதை மக்களிடம் எடுத்துரைத்து கிராம சபைக்கு மக்களை கலந்திட வையுங்கள்.
அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்
You must be logged in to post a comment.