8
இராமநாதபுரம் அல்லிக்கண்மாய் பகுதியில் மயானம் உள்ளது. நகராட்சி சார்பில் கடந்த 2012 ஜனவரி 26ல் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இதனை தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. எரிபொருளை உருவாக்கும் உபகரணங்கள் பழுதடைந்துள்ளது. இங்கு தகனத்திற்கு கடந்த சில நாட்களாக எடுத்து செல்லப்படும் பிணங்கள் திறந்தவெளியில் எரியூட்டப்படுகின்றன.
இப்பிரச்னைக்கு துரித நடவடிக்கை மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.