பா.ஜ  தேசிய செயலர் மீது நடவடிக்கை கோரி நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பாக காவல்துறை கண்காணிப்பாளரிடம். மனு..

உயர் நீதிமன்றத்தை கண்ணிய குறைவாகவும், தமிழக காவல் துறையை அவதூறாகவும், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேசிய வீடியோ பதிவு கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  அவ்வாறு  ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் விதமாக பேசிய எச். ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலர் ரா.காளீஸ்வரன் ஆகியோர் இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..