8
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே டூவீலர் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் குருநாயக்கனூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
இன்று (12/09/2019) மதியம் இவர் ஏர்வாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோவுடன் நேருக்கு நேர் மோதியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.