திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த, ஜோதிப்பிரியா வயது 16, வத்தலக்குண்டு காட்டாஸ்பத்திரியில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு BPossitive இரத்தம் தேவைப்பட்டது. இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார் ஜோசப் கோவில் பிள்ளை.
இதனை கண்ட மனிதநேயமுள்ள வத்தலக்குண்டு நகர SDPI கட்சியின் நிர்வாகிகள் அரசு மைதீன், திப்பு சுல்தான், கரீம் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்து உதவினர். இத்தகைய உதவியை தன்னலம் பாராமல் செய்து உதவிய அனைத்து நண்பர்களுக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் மனமுருக நன்றியை தெரிவித்து உள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .————————————////:—————————
You must be logged in to post a comment.