Home செய்திகள் இராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை..

இராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை..

by ஆசிரியர்

இந்த ஆண்டின் பருவ மழை முழுமையாக தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று (31/08/2018) மதியம் வரை மிதமான வானிலை தொடர்ந்தது. இதையடுத்து மதியம் 2 மணி அளவில் வானில் திரண்ட கருமேகங்கள் மழையாக கொட்டியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நகரை குளிர்வித்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

—————///——————-///———————-///

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!