மதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ செய்தி..

மதுரை கோச்சடையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இங்கு தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளது.

இன்று (டாஸ்மாக்) கடை திறப்பதற்கான வேலைகள் ஆரம்பித்தனர். கடை திறக்கும் போது அப்பகுதி பொதுமக்கள் கூடி டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கடை முன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்திய பின் டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது. அதன் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தி:-வி.காளமேகம், கீழை நியூஸ், மதுரை

—————///——————///—————-

புனித ரமலான் வாழ்த்துக்கள்..