இராமநாதபுரத்தில் 01.09.2018 அன்று வேலை வாய்ப்பு சம்பந்தமான கருத்தரங்கு..

ரோட்டரி கிளப் கோல்டன் ராம்நாடு, இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு 01.9. 2018 காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இராமநாதபுரம் யாதவா திருமண மகாலில் நடக்கவுள்ளது.

சென்னை வருமான வரி அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி வல்லுநராக கலந்து கொண்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக பயிற்சி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ரோட்டரி கிளப் கோல்டன் ராம்நாடு, இராமநாதபுரம் செய்ய து அம்மாள் பொறியியல் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தி: முருகன், இராமநாதபுரம் . கீழை நியூஸ்

—————————————————————

புனித ரமலான் வாழ்த்துக்கள்..