சுதந்திரம் – நாமும் அறிவோம்.. குழந்தைகளையும் பயிற்றுவிப்போம்..

முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் தான், ஆனால் தன் வரலாறையும் தொலைத்ததால், இன்று உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது.  சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்ற மாயையை திருத்தி அமைக்கப்பட்ட இந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகள் பொய்யை திரும்ப திரும்ப கக்குகின்றன.

இந்தியாவில் 72, வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்… ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!

வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கும் தங்கள் உயிரையும், உடமைகளையும் அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் இங்குமட்டுமே, சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலமும் இங்கு மட்டுமே. கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூலித்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்துவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?

மாவீரன் திப்பு சுல்தான்: ”ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!” என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிச்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் ‘இது ஒரு கற்பனைக் கதை’ என்றதான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?

பேகம் ஹஜ்ரத் மஹல்: டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)

அஸ்பக்குல்லா கான்: பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கிலிடப்பட் மற்றொரு மாவீரன் அஸ்பக்குல்லா கானை ஏன் மறந்தது… இல்லை மறைத்தது?

மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச்சேர்ந்த மருதநாயகம்பிள்ளையாய் இருந்து பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான். என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.

மாப்பிளாமார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவிலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)

கள்ளுக்கடை போராட்டம்: காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 பேர் முஸ்லிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபிப்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். சொத்து மதிப்பு சுமார் ஒரு கோடி அன்றைய தேதியில் ஒரு பவுன் நகையின் விலை 24 அனா, அப்படி என்றால் இன்றைய தேதியில் அவரின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

இவரின் இந்த தியாகத்திற்கு இணையான ஒரு நபரை இந்த பாசிஸ்ட்டுக்களால் காட்டமுடியுமா. நேதாஜியை சொல்லும் பொழுது இவரை ஏன் மறைத்தார்கள்.

கப்பல் ஓட்டிய தமிழன் : கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. யா? வரலாற்றில் திரிப்பு நடக்கும், வரலாற்றையே திரித்த பெருமை போலி சுதந்திர போராட்ட வீரர்கள் ஆனா பாசிஸ்ட்டுக்களியே சாரும். அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 1 லட்சம் (இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் ) வழங்கிய, ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?அந்த டிரஸ்டிற்கு பொதுச்செயலாளரும் (GENERAL SECRETARY) இவரே, உதவி செயலாளர் தான் வா.உ.சி. கப்பலை ஒட்டிய நபரை குறிப்பிடும் பொழுது அதற்கு சொந்த பணத்தை தந்து,பொறுப்பாளராகவும் இருந்த நபரை பள்ளி புத்தகத்தில் அச்சிடாமல் ஏன் மறைக்கிறீர்கள்.

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம் அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு: இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின… ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை) 2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்) 3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.) 4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்) 5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்) 6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்) 7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்) 8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.) 9. அப்துல் ஹமீது 10. மௌலானா அப்துல் காதர்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலிம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் தத்தனனூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துர் ரஜாக் காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் அத்தியூத்து இபுராஹிம் சென்னை ஜாபர் ஹக்கிமி சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் தஞ்சை முஹம்மது தாவூது அறந்தாங்கி முஹம்மதுசெரிபு திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் வடபழனி சென்னை முஹம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முஹம்மது இபுராஹிம் சென்னை முஹம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா குடியத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இராமநாதபுரம் சையது கனி பரகப்பேட்டை தாஜிதீன் மன்னர்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் கும்பகோணம் சுல்தான் இராமநாதபுரம் தாஜிதீன்

இந்திய சுதந்திரத்திற்கு போராடிய வீரனுக்கு இந்தியா செய்தது இது தான் படியுங்கள் நெஞ்சம் குமுறுகிறது. Comments from Dr.Md.Aslam: My maternal grand father Moulana Moulvi Syed Murtaza was a great personality in Trichy who was an active participant in Quilafath movement and there is a school in his name at Trichy. After his death the school was taken over by the Govt.and it was named as Govt.Islamia School. It was Mr.Rajagopalachary who was his great friend changed the school’s name as Govt.Syed Murtaza High School. He was good friend of Pandit Jawaharlal Nehru, Sir Rajagopalachari and other great leaders. Still people remember him in the name of Bade-Hazrath. He was elected as MLA(central) un opposed from Trichy for 25 years. How come his name has been left in the list of freedom fighters. He expired in the year 1949. It is quite surprising how come his name is not in the list.This is for your kind information.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..