10
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப மின் நிலையத்தில் 17/8/2018 (வெள்ளி கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4. 45 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரக உப கோட்ட உதவி செயற்பொறியாளர் எம். சந்திரசூடன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் மின் விநியோக பிரிவு கட்டுப்பாட்டில் இராமேஸ்வரம் உப மின் நிலையம், இராமேஸ்வரம் நகர், வேர்க்கோடு, இராமேஸ்வரம் ரோடு, ஓலைக்குடா, செம்ம மடம்,, அரியாண் குண்டு, தங்கச்சிமடம் , மண்டபம் மின் விநியோக பிரிவு கட்டுப்பாட்டில் மண்டபம், தோணித்துறை, சுந்தர முடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், பாம்பன், அக்காள்மடம், குந்துகால் பகுதிகள் மின் தடையால் பாதிக்கும்.
You must be logged in to post a comment.