10
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் உட்கார மர பெஞ்ச் மற்றும் மாணவர்கள் புதன் தோறும் அணிய புதிய சீருடை வழங்கப்பட்டது.
மாணவர்கள் இது வரை செயல்வழி கற்றல் முறையில் தரையில் அமர்ந்து கற்று வந்தனர். தற்பொழுது புதிய கற்றல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் தரையில் தான் அமர வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் பெஞ்ச் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரைச் சேர்ந்த தொழிலதிபர் DSF D.சத்தியநாதன் அவர்கள் சுமார் ₹.35,000/- மதிப்பில் தரமான கோங்கு பலகையில் 6 மர பெஞ்சுகள் செய்து வழங்கினார். அந்த பெஞ்சுகள் இன்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிப் பள்ளி மாணவர்கள் போல் ஆடை அணிந்து செல்வதையே விரும்புகின்றனர். அந்த ஆசையையையும் நிறைவேற்றும் வகையில் கடந்த ஆண்டு முதல் புதன் தோறும் டீ சர்ட், பேண்ட் அணிந்து வருகின்றனர். இதனை மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தனது தாயார் நினைவாக வழங்கி வருகிறார். அதுவும் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்கு மர பெஞ்ச் செய்து வழங்கிய வேம்பார் D.சத்தியநாதன் அவர்களுக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீ.மாரிமுத்து அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி ச.முனீஸ்வரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் மற்றும் ஆசிரியர் பா.தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.