இராமநாதபுரத்தில் முழு கடையடைப்பு .. பல இடங்களில் மொட்டையடித்து கலைஞருக்கு அஞ்சலி..

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவையொட்டி இராதநாதபுரம் நகர் முழுவதும் கடை அடைக்கப்பட்டு கடைவீதிகளே வெறிச்சோடி கிடக்கிறது.

மேலும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல இடங்களில் திமுக தொண்டர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைவுக்காக மொட்டையடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இராமநாதபுரம் இந்திரா நகரில் தி.மு.க., ஆதி திராவிடர் அணி நகர் அமைப்பாளர் சுதாகரன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..