கடலுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்களை அலைபேசியில் படம் எடுத்த மீனவர்களை தாக்கிய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நம்புதாளை மீனவர்கள் புகார் அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணனுக்கு சொந்தமான பைபர் படகில் நான்கு பேர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கண்ணா, பாலு உள்பட இரண்டு பைபர் படகுகளில் வந்த 16 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை கடலுக்குள் வீசி அதன்மூலம் மீன்களைக் கொன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட நம்புதாளை மீனவர்கள் அவர்களது அலைபேசியில் வெடி குண்டு வீசுவதை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பதினாறு பேர் கொண்ட கும்பல் நம்புதாளை மீனவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களின் அலைபேசியை அவர்களிடம் இருந்து பறித்து கடலுக்குள் வீசியுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 5.8.2018இல் நடைபெற்றது. இதுகுறித்து கடலோர காவல்படை அலுவலகத்தில் நம்புதாளை மீன்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இன்றுவரை சரியான நடவடிக்கை எடுக்காத கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களிடம் நம்புதாளை சேர்ந்த மீனவர்கள் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் எங்க ராஜா தலைமையில் புகார் அளித்தனர்.
You must be logged in to post a comment.