Home செய்திகள் தொல்லை கொடுத்த மகன் கொலை போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தந்தை கைது: மற்றொரு மகன் மீது வழக்கு..

தொல்லை கொடுத்த மகன் கொலை போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தந்தை கைது: மற்றொரு மகன் மீது வழக்கு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகே முத்துப்பட்டியைச் சோ்ந்தவர் பாலசுப்ரமணியன், 47. இவரது இரண்டாவது மகன் மணி என்ற மணிகண்டன், 23. இவர் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பாலசுப்ரமணியனுக்கும், மணிகண்டனுக்கும் அடிக்கடி தகராறு செய்வது ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல போதையில் வீடு திரும்பிய மணிகண்டன் பாலசுப்ரமணியிடம் தகராறு செய்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன் மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அஞ்சிய பாலசுப்ரமணியன் உறவினர்கள் உதவியுடன் நேற்று அதிகாலை மணிகண்டன் உடலை தனியார் நிலத்தில் எரித்துள்ளார். மகனை கொலை செய்து உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக மண்டலமாணிக்கம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதன்படி பாலசுப்ரமணியனை மண்டலமாணிக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார். உடந்தையாக இருந்ததாக பாலசுப்ரமணியின் மூத்த மகன் முனியசாமி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!