5
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையிலிருந்து திண்டுக்கல் வந்த மினி பேருந்து கொட்டபட்டி குளம் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த மினி பேருந்தில் பயணம் செய்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.