நாளை (06/08/2018) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..

நாளை (06/08/2018 – திங்கட்கிழமை) நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.   சென்னையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்னும் 2 மாதத்திற்குள் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. சமவேலை சமஊதியம் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..