வேலூர் திருப்பத்தூரில் குடும்ப தகறாரில் மனைவியை கொன்ற கணவன்..

வேலூர் மாவட்டம்- திருப்பத்தூரில் 13/6 டி..எம் சுலைமான் தெருவில் பாபு என்பவரின் மகன் அல்தாப் (26),  இவர் ஊதங்கரையில் பழ வியபாரம் செய்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு   மாலிக் பாஷா மகள் நாசியா (22) என்பவருடன் திருமணம் ஆகி 1 வயதில் ஓரு மகனும் உள்ளான்.

சமீப காலமாக  வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தினால் இருவருக்கும் இடையில் தகராறு தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது.  அல்தாஃப் தன் மனைவியிடம் அடிக்கடி குடும்ப செலவுக்கு பணம் கேட்டு பிரச்சினை செய்துள்ளார்.  இந்நிலையில் இன்று (05/08/2018) தன் மனைவியை பணம் தராத ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பந்தமாக திருப்பத்தூர் நகர காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..