இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சித்தார் கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஆகியன சார்பில் முகமதியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் இன்று (06/08/2018) நடந்தது.
முகாமில் கலந்து கொண்ட 260க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சர்க்கரை அளவு, கால் நரம்பு, கால் ரத்தக்குழாய், கால் பராமரிப்பு மருத்துவ பரிசோதனை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆபரேஷன் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர்கள் பரணி குமார், வித்யா பிரியதர்ஷினி, சுரேந்திரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். கண் ஆபரேஷனுக்கு பரிந்துரைக்சப்பட்ட 15 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர்.
You must be logged in to post a comment.