10
மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் அருகில் தண்டவாள பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவி பிணமாக கண்டெடுப்பு. இது குறித்து மதுரை ரெயில்வே போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாணவி இன்று காலை தென் மாவட்டம் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் படிக்கட்டில் நின்ற அவர் தவறி விழுந்து இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.