Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் வெட்டுகுளம் கிராமத்தில் எருது கட்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் வெட்டுகுளம் கிராமத்தில் எருது கட்டு விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் ஒன்றியம் வெட்டுகுளம் கிராமத்தில்  ஸ்ரீ கொல்லாருடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைப்பாரி விழாவை முன்னிட்டு  வடமாடு எருது கட்டும் விழா வெகு சிறப்பாக நடந்தது.  இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கிராம தலைவருமான வாசுதேவன் தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் முன்னிலை வகித்தார்.

எருது கட்டு விளையாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட மாடுகள் விடப்பட்டன.  வெட்டுகுளம் கிராம மாடுபிடி வீரர்கள் மாடுகளை அடக்க முயற்சித்தனர். இந்த விளையாட்டில் மாடுகள் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் வயல்வெளிகளில் துள்ளி குதித்து ஆவேசத்துடன் ஓடியது பார்வையாளர்களை வெகுவும் கவர்ந்தது.  இவ்விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து   ஏராளமான கிராம மக்கள் பார்வையாளராக வந்திருந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

திருப்பாலைக்குடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஊராட்சி செயலாளர் ரமேஷ், தங்கவேல், மாயழகு, ராமநாதன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!