மங்களூர் கடலில் பலியான ராமேஸ்வரம் மீனவர் மீட்பு..

கர்நாடகா மாநிலம் மங்ளூர் கடலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே அக்காள்மடம் கிராமத்தைச்சேர்ந்த விக்டர் ஞானசவுந்தர் மகன் எட்வின் ( 25) விசைப்படகில் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடலில் தவறி விழுந்தார். சக மீனவர்கள் விரைந்து தேடினர். ஆறு மணி நேரம் தேடுதலுக்குப்பிறகு அவரின் உடல் மீட்கப்பட்டது. இறுதி சடங்கு செய்ய சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக அரசுக்கு எட்வின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..