கீழக்கரை தெற்குத் தெவில் இருந்து வடக்குத் தெருவை நோக்கி செல்லும் முச்சந்தி சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிய வண்ணம் உள்ளது. அவ்வழியாக தினமும் பல நகராட்சி ஊழியர்கள் கடந்து சென்ற வண்ணம்தான் உள்ளனர். ஆனால் யாரும் இதை சீர் செய்ய முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.
அப்பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவு தண்ணீர் வீணாவதை தடுக்க முயற்சி செய்தாலும், தண்ணீர் சாக்கடையில் கலந்த வண்ணம்தான் உள்ளது. அதே சமயம் பொதுமக்களும் வாருகால் மூடிகளை திறந்து குப்பைகளை கொட்டும் பழக்கத்தை விட்டொழித்தாலே சுகாதாரக் கேட்டில் இருந்து மீளலாம். சுகாதாரத்திற்கு தனி மனித ஒழுக்கமும் மிக அவசியம் என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.
You must be logged in to post a comment.