11
இராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் 8 வது ஆண்டுவிழா அதன் தலைவர் சேசுராஜ் தலைமையில் ஜனார்த்தனன் மஹாலில் நடைபெற்றது. துணை தலைவர் பாண்டியன் வரவேற்றார். செயலாளர் இராமகிருஷ்ண ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன், ஹெல்பேஜ் இண்டியா இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். செயற்குழு உறுப்பினர் அன்சாரி நன்றியுரையாற்றினார். இதில் பொருளாளர் இரவீந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.