Home செய்திகள் கடலாடி கொண்டுநல்லான்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்..- செயலி அறிமுகம்..

கடலாடி கொண்டுநல்லான்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்..- செயலி அறிமுகம்..

by ஆசிரியர்

இன்னு (25.07.18) கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் கடலாடி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை திட்டங்கள், வேளாண்மை வணிக துறைத் திட்டங்கள், தோட்டக்கலைத் துறைத் திட்டங்கள் மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ​ ​​கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் கடலாடி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் கிஸான் கல்யாண் அபியான் எனும் விவசாயிகள் நல்வாழ்வு இயக்க கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) வெங்கடேசன்  தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) முருகேஸ்வரி வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.

வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பாலாஜி தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு முறைகள் குறித்து எடுத்துக் கூறினார். கால்நடை உதவி மருத்துவர் பகத்சிங் கால்நடைத்துறை திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார். தோட்டக்கலை உதவி இயக்குநர்(பொ) பழனிச்சாமி தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். தோட்டக்கலை துறையின் சார்பாக மா மற்றும் எலுமிச்சை பழக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் விவசாயிகளுக்கு உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உழவன் செயலியின் நன்மைகள் மற்றும் நுண்ணீர் பாசனம் பற்றி துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் எடுத்துக் கூறினார் வேளாண் துறை சார்பாக பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்பட்டது. அதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார். ​

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!