இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க்கூடிய ஓடை பாலம் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெரும் முயற்சி மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த புதுமடம் ஊராட்சிக்குட்பட்டது அம்மா பட்டினம்ப, புதுமடம் மற்றும் அம்மாபட்டினம் இவ்விரு கிராமங்களை இணைக்கும் வகையில் மன்னர் ஆட்சி காலத்தில் பழமையான கற்களை கொண்டு மக்கள் நடந்து செல்லும் வகையில் ஓடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் வழியே இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாது. சட்டசபை தேர்தல் வரும் போதெல்லாம் இப்பகுதி மக்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளிடம் பாலத்தை கட்டித்தர கோரிக்கை வைப்பர். ஆனால் மன்னர் காலம் முதல் வெற்றி பெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராமநாதபுரம் தொகுதி யில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் எவரும் இந்த பாலத்தை கட்டித்தர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆதலால் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க ப்போவதாக அறிவித்தனர் . இதனை அறிந்த அதிமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதி மில் போட்டியிட்ட டாக்டர் மணிகண்டன் அப்பகுதி மக்களை சந்தித்து நீண்ட நெடு நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த ஓடைப்பாலத்தை நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
இந் நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து டாக்டர் மணிகண்டன் அமைச்சர் ஆனார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தொகுதி முழுவதும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். அது போல அம்மா பட்டினம் புதுமடம் கிராமங்களை இணைக்க கூடிய ஓடை பாலம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜா, புதுமடம் ஊராட்சி செயலர் நாகேந்திரன், ஒப்பந்ததாரர் திருமுருகன், புதுமடம் ஊராட்சி கழக செயலாளர் தர்வேஸ், கிராமத்தலைவர் தனிக்கோடி , இராமநாதபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராமமூர்த்தி, மண்டபம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சந்திரன், பெருங்குளம் ஊராட்சி கழக செயலாளர் ஜானகிராமன், பட்டணம் காத்தான் ஊராட்சிக் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், தொழிலதிபர் டாக்டர் ஜெயகார்த்திகேயன், அரசு வழக்கறிஞர் மண்டபம் கருணாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, மாவட்ட ராம்கோ தொழிற்சங்க செயலாளர் மங்களநாதசேதுபதி, உச்சிப்புளி ஊராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், மண்டபம் ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் பாலசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் உடையத் தேவன், சுப்பு தேவன் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அம்மா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
You must be logged in to post a comment.