தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு அறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் மயக்கமடைந்த மாணவர் இறந்து விட்டதாக கருதி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பாத்திமா மெட்ரிக்குலேசன் மேல் நிலை பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே உணவு இடைவேளையின் போது கைகலப்பு ஏற்பட்டது. அபோது ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அலேக்காக தூக்கி தரையில் ஓங்கி அடித்தார்.
அடித்த வேகத்தில் அந்த மாணவர் மயக்கம் அடைந்ததால் சக மாணவர்கள், தாக்குதலுக்குள்ளான மாணவர் இறந்து விட்டதாக கூறி அவரை அங்கிருந்து தூக்கிச்சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மாணவன் சிகிச்சைக்கு பின்னர் மயக்கம் தெளிந்தார். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் பள்ளி முடிந்து வெகு நேரமாக வீடு திரும்பாத நிலையில் பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். தன்னால் தாக்கப்பட்ட மாணவன் இறந்து போனதாக கருதி அந்த மாணவன் உயிரை மாய்த்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்த நிலையில், அந்த மாணவன் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
விளையாட்டு சண்டை கூட விபரீதமாகும் என்பதற்கு இந்த சம்பவத்தை காவல்துறையினர் சுட்டிக்காட்டினாலும் கவனக்குறைவாக இருந்து மாணவன் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
You must be logged in to post a comment.