வேலூர் மாவட்டம் காட்பாடியில் காது கேளாதோர்களுக்கான மாநில அளவிலான சதுரங்கபோட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் சத்தியநாராயணா தலைமை தாங்கி துவங்கி வைத்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார். இதில் சதுரங்க சங்க செயலாளர் ரவி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். சதுரங்க போட்டியில் ஜுனியர் பெண்கள் பிரிவில் திருநெல்வேலி ஆரோக்கியமேரி முதல் பரிசும் விருதுநகர் சுவேதா இரண்டாம் பரிசும் வென்றனர். சீனியர் பிரிவில் திருநெல்வேலியை சேர்ந்த மாதேஸ்வரி மற்றும் இதே மாவட்டத்தை சேர்ந்த அபிநயா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
ஜுனியர் ஆண்கள் பிரிவில் ரிஸ்வா முதலிடமும், அதே திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரி இரண்டாம் இடமும் பிடித்தனர். சீனியர் பிரிவில் வேலூரை சேர்ந்த சிவராமன் முதலிடமும், திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் இரண்டாமிடமும் பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்து வென்றது. இந்த காதுகேளாதோர் சதுரங்கபோட்டியில் 120 பேர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.