8
தமிழக கடலில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15- ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. இந்தாண்டு தடை காலம் நீக்கத்திற்கு பிறகு சில நாட்கள் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வந்த நிலையில் 3 விசைப்படகுகள் 16 மீனவர்களை இலங்கை சிறை பிடித்தது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.
தடைக்காலம் முடிந்த பிறகு 5 முறை மட்டும் கடலுக்குச் சென்றதால் மீனவ தொழிலாளர் வாழ்வாதாரம் பாதித்தது. இதை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச்செல்வதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தீர்மானித்தனர். அறிவிப்பையடுத்து வரும் 14ல் (சனி) தொழிலுக்குச் செல்கின்றனர்.
You must be logged in to post a comment.