கோவை அருகே இன்று (12/7/18) பேரிடர் பயிற்சியின்போது குதிக்க மறுத்த மாணவியை பயிற்சியாளர் தள்ளி விட்டதில் தலையில் அடிபட்டு பலியானார். அம்மாணவி நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
சம்பவம் நடந்த பொழுது 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. வீடியோ பதிவிலும் அவ்வாறே காணப்படுகிறது.
மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது கீழே விழந்த பொழுது எதிர்பாராத விதமாக தடுப்பில் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.
You must be logged in to post a comment.