Home செய்திகள் இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜல சக்தி கடல் பகுதியான மண்டபம் வடக்கு கடற்கரையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது நாட்டுப் படகுடன் நின்று கொண்டிருந்த சிலர் தப்பி ஓடினர்.
படகை சோதனை செய்ததில் பதப்படுத்திய 500 கிலோ  கடல் அட்டைகள் இருந்தன . இதன் மதிப்பு ரூ 5 லட்சம் . நாட்டுப்படகை கைப்பற்றினர்.  பறிமுதல் செய்த கடல் அட்டைகள்  இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரிக்கின்றனர். தப்பி ஓடியவர்களை தீவிர தேடி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!