கீழக்கரையில் இருந்து திருஉத்திர கோசமங்கைக்கு பஸ் வசதியின்றி இருந்து வந்தது. இராமநாதபுரம் சென்று மறு பஸ் மாறி செல்ல வேண்டும் என்ற நிலையில், ஊர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தற்போது கீழக்கரையில் இருந்து ஒரே பஸ்ஸில் களரி, உத்திரகோசமங்கை வழியாக கொத்தங்குளம் (எக்குடி வழியாக) வரை செல்லும் புதிய வழித்தடம் ஒன்று துவக்கப்பட்டது.
இந்த வழித்தடத்திற்காக எக்குடி ஜமாத்தினர் சமீபத்தில் அமைச்சர் மணிகண்டனை நேரில் சந்தித்து போக்குவரத்து வசதி செய்ய கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (07/07/2018)மதியம் 1.30 மணி அளவில் கீழக்கரை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தகவல் தொழில் பிரிவு அமைச்சர் திரு. மணிகண்டன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரசு பேருந்து அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகள் மற்றும் அஇஅதிமுக கழக தோழர்களும் உடன் இருந்தனர்.
தகவல்:- மக்கள் டீம்
You must be logged in to post a comment.