Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழக டி.ஜி.பிக்கு கொலை மிரட்டல்: சேலம் இளைஞரிடம் போலீசார் விசாரணை..

தமிழக டி.ஜி.பிக்கு கொலை மிரட்டல்: சேலம் இளைஞரிடம் போலீசார் விசாரணை..

by ஆசிரியர்

சென்னை:தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.தே.க.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக , சேலத்தைச் சேர்ந்த  இளைஞரிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்படுவதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ஓய்வு பெற்றற ராணுவ வீரர்  என்றும், சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை எதிா்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு காவல்துறைற அனுமதி மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் பேசியுள்ளார். மேலும் தமிழக காவல்துறைற டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த அதிகாரிகள், அந்த அழைப்பு குறித்து விசாரணை நடத்த சைபர் குற்றறப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டனர். சைபர் குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில், அந்த அழைப்பு சேலம் கிச்சிபாளையம் சந்நியாசி குண்டு தெரு பகுதியைச் சேர்ந்த  பாலகிருஷ்ணராஜா என்பவர் செல்லிடப்பேசியில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அழைப்பு வந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் சேலம் போலிசார், பாலகிருஷ்ணராஜாவை பிடித்து விசாரணை செய்ததில், மிரட்டல் விடுத்தது அவரது மகன் விஜயபாபு (35) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலிசார் விஜயபாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனார். போலிசார் விசாரணையில் அவர், காவல்துறை உயர் அதிகாரிகள் செல்லிடப்பேசியையும் தொடர்பு கொண்டு மிரட்டும் வகையில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது இதில் விஜயபாபு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறறது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவது குறித்து போலிசார் ஆலோசித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!