Home செய்திகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண்கள் பலி…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண்கள் பலி…

by ஆசிரியர்
சாயல்குடி அருகே அதிகாலை சுமார் 5.30 மணியளவில்  ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தள்ளு வண்டியில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது இராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி மார்க்கத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த காஞ்சி மனைவி அங்கம்மாள் (வயது:60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மனைவி சண்முகவள்ளி( வயது:55), செல்வராஜ் மனைவி ராமாயி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் ராமாயியும் உயிரிழந்துவிட்டார்.
அதிகாலை வேளையில் அசுர வேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தண்ணீர் பிடித்து வந்த  அப்பாவி பெண்களின் உயிரைக் குடித்துள்ளது. இந்தக் கோர  விபத்து குறித்து வாலிநோக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!