Home செய்திகள் இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் குழந்தைகளுக்கு பாராட்டு விழா…

இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் குழந்தைகளுக்கு பாராட்டு விழா…

by ஆசிரியர்
இன்று  (03/07/2018) இராமநாதபுரத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் 10, +1, +2 வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த  செய்தியாளர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தனபாலன்  தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் வால்டர் ஸ்காட், துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து செயலாளர் ஜெகஜாதி  வரவேற்றார்.
இந்த விழாவில்  10ம் வகுப்பு மாணவர்கள்  அபினேஷ் சர்மா, பார்கவி பாரதி, +1 மாணவர்கள் காவியதர்ஷினி,  பாக்கியலட்சுமி,  தமிழ்ச்செல்வன், +2 மாணவர்கள் சிவக்குமார், நந்தினி, முஹம்மது பாஸில், காரைக்குடி அழகப்பா பல்கலை அளவில் பி.எஸ்சி கணிதப் பாடத்தில் தங்க மெடல் பெற்ற மாணவி ஜெயசூர்யா ஆகியோரை
மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
இவ்விழாவில்  இராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் காமினி,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, ரோட்டரி சங்க ஆளுநர்   சின்னதுரை அப்துல்லா, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர்  வாழ்த்துரை பேசினர். பொருளாளர்  மகேஸ்வரன் நன்றி கூறினார். ஊராட்சிகளின்  உதவி இயக்குனர் செல்லத்துரை, டாக்டர் அரவிந்தராஜ்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கயிலை செல்வம், விஜயகுமார், காவல் தனிப்பிரிவு சார் ஆய்வாளர் ஜெயக்குமார், இணைச் செயலாளர்கள் ரகு, இளங்கோவன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராமு, பரமேஸ்வரன்,  முருகன்,  ஆரிபுராஜா, சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!