5
சாயல்குடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூன் 19 அன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விநாயகர், கருப்பண்ணசாமி, பாலமுருகன்உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு யாகசாலை பூஜையும்,அபிஷேக, ஆராதனையும், செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டனர்.
மாலையில் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்துபெண்கள் பூ தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பூஜைகளை சண்முக பட்டர் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின்முறை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.