வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜமீன் தேசிய சாலையில் காரில் தப்பிச்சென்ற 3 கூலி படையை சேர்ந்த கொலையாளிகளை தேசிய சாலை ரோந்து போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.
சிவமூர்த்தி கார்மண்ட் கம்பனியில் பணி புரியும் பூவனேஸ்வரிக்கும், சிவமூர்த்திக்கும் கள்ளக்காதல் என அறியப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மூர்த்தி கூலி படையை வைத்து கடத்தி கொலை செய்துள்ளனர்.
அக்கொலையை செய்து விட்டு தப்பி வந்த 3 பேரையும் சாலை ரோந்து போலிஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் கோயம்பத்தூர் பகுதியே சேர்த்த சகாதேவன் மகன் மணிபாரதி வயது 22, செல்வராஜ் மகன் கொளதமன் வயது 22, கண்மணி மகன் விமல் வயது 35 அகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் என தகவல். தற்போது திருப்பூர் போலீஸார் 3 கொலைக் குற்றவாளிகளை ஓசூர் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறது.
You must be logged in to post a comment.