உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. வருடத்தில் 5 முறை உற்சவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது.
6 வது முறையாக மார்கழியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். அதிகாலை 4 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில்
ஆனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர்களுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்களால் சிவபுராணம், திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்பட்டது. பூஜைகளை டி.எம்.கோட்டை நாகநாத குருக்கள் செய்திருந்தார்.
கோயில் நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அன்னதானம் நடந்தது.
You must be logged in to post a comment.