8
இராமநாதபுரத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அமைப்பின் வளர்ச்சி மாவட்ட முழுவதும் நிர்வாகிகள் நியமிப்பது, மக்கள் சட்ட உரிமை கழகமும்- மதுரை வேலம்மாள் மருத்துவ மனையும் இணைந்து இராமநாதபுரத்தில் மருத்துவ முகாம் றடத்துவது பற்றியும், குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, பள்ளி கூடம் செல்லும் சாலைகளை சரி செய்வது பற்றி அரசுக்கு கோரிக்கையாக மனு கொடுப்பது பற்றியும், சுகாதார துறைக்கு கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்துவது, மரக்கன்று நடுவது, மாநாடு நடத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற விசயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் ஜெயபாலன் மாநில தலைவர் பாரதிராஜா, பொருளாளர் முருகேசன், கழக செயலாளர் சேக் சலீம், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.