Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் தரீகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா!

இராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் தரீகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழா!

by ஆசிரியர்
இராமநாதபுரம்  மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள ஒப்பிலான் கிராமத்தில் தரிகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் என்னும் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த  வியாழனன்று தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 4.30 க்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அஹ்மது இப்ராஹீம் ஃபாஜில் தேவ்பந்தி   ஒப்பிலான் மவ்லானா, மவ்லவி, அமானுல்லாஹ் மன்பயீ ஆகியோர்  தலைமை வகித்தனர். தரீகுல் ஜன்னா ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  மஸ்ஜித் முஅத்தீன் மவ்லவி.ஷப்பீர் அஹ்மது கிராஅத் ஓதினார். ஒப்பிலான் பாடகர் செய்யிது கீதம் வாசித்தார்.விழாவில் பல்வேறு மவ்லானா, மவ்லவி,  முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர். சென்னை தலைமை இமாம் சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி காலை 9 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் நாகூர்கனி தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  விழா குழு தலைவர் காதர் அலி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமா அத்துல் உலமாசபை மாநிலத்தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி ஹல்ரத் கிப்லா,  மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் ஹைதர்அலி மிஸ்பாஹி ஹல்ரத் கிப்லா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர். சிங்கப்பூர் பைத்துல் இர்பான் நிறுவனர் அஸ்லாமா அல்ஆரிஃப் பில்லாஹ் அஷ்ஷெய்க் மஹ்வீ ஷாஹ் முஹிப்பி தாமத் பரகாத்துஹு து ஆ செய்து பள்ளியை திறந்து வைத்தார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  விழா ஏற்பாடுகளை ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!