8
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி 49 வது பிறந்தநாள் விழா தேவிபட்டிணம் பஸ் ஸடாண்ட் அருகே உள்ள திடலில் இராமநாதபுரம் வட்டாரத்தலைவர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தேவிபட்டிணம் காங்கிரஸ் நிர்வாகி அன்சாரிசேட், வட்டார நிர்வாகி சந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.