6
தமிழகம் முழுவதும் மக்களின் பிரச்சினையை அரசாங்கத்துக்கு எடுத்துரைக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் கோரிக்கை பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (11-06-2018) கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார பயணகூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, மாவட்ட செயலாளர் காசிநாத துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.