இன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது.
கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் ஆகிய இருவருக்கும் “சிகரம் 2018” என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவில் கீழக்கரையில் சினர்ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.ஹுசைன் பாஷாவுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
வணக்கம். நான் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தட்டச்சு பயிலகம் வைத்து நடத்தி வருகிறேன். எமது பயிகலத்தில் பயின்ற பல மாணவர்கள் தற்போது அரசு வேலையில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் எமது பயிலகத்தின் சாதனைகள் சில: 3 முறை 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளோம். மேலும் கடந்த 2001-ம் ஆண்டில் 2 முறை அரசு தட்டச்சு தேர்வில் எமது மாணவிகள் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். எமது பயிலகம் வெள்ளிவிழா பயிலகமாகும். மேலும் நான் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கோயமுத்தூர் அருகில் உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை சென்று வருகிறேன் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.