Home செய்திகள் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்தர பீடி இலை மூடைகள் பறிமுதல்..

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்தர பீடி இலை மூடைகள் பறிமுதல்..

by ஆசிரியர்
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற  ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் மூடைகளை பறிமுதல் செய்துள்ளனர்
மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியில் இன்று (25-04-2018) அதிகாலை மூட்டை, மூட்டைகளாக நடுக்கடலிலும் கடல்கரை ஓரத்திலும் கரை ஒதுங்கியுளள்தாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச்  மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுங்கத்தறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய சுமார் 25 மூட்டை உயர்ரக பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நடுக்கடலில் மிதந்துவரும் மூட்டைகளை மெரைன் போலீஸார் மற்றும் மீனவர்களின் உதவியுடன்  மீட்கும் முயற்சியல் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பீடி இலைகள் உயர்ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் எனத் தெரிவித்தனர்.
மேலும்  இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது  நடுக்கடலில் படகு மூழ்கியதால்  மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரோ அல்லது கடலோரகாவல் படையினரோ ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது கடத்தல் காரர்கள்  படகில் உள்ள மூட்டைகளை கடலில் வீசி விட்டு   கடத்தல்காரர்கள் தப்பிச்  சென்றிருக்லாம் என்ற கோணத்திலும் பாதுகாப்பு படையினர் விசரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா, கடல் அட்டை, போதை மாத்திரை, பீடி, வலி நிவாரணி மாத்திரைகள் வரிசையில் தற்போது பீடி தயாரிக்க பயன்படும் இலைகளும் சேர்ந்துள்ளது என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!